commodity tips

Commodity Tips

Monday 14 October 2013

நாட்டு மருத்துவம் நெல்லிகாய், எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமலும தடுக்கும்


http://rangadharpurnami.blogspot.in/

நாட்டு மருத்துவம்  எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமலும தடுக்கும்

நெல்லிகாய்
          இது முதுமையை துரத்தி இளமையை தரும் பித்தத்தை குறைக்கும் வாய்ப்புண் தீரும். தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும். நெல்லிச்சாறை தேனுடன் கலந்து தினமும்
காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமலும தடுக்கும்

இஞ்சி
          அஜீரணம் குணமாக்கும் உமிழ்நீரைப் பெருக்கும் பசியைத் தூண்டும்; உஷ்ணத்தை உண்டாக்கும் வயிற்று உப்புசம் புளியேப்பம் வாந்தி குடல் கோளாறு கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். சுவாசகாசம் இரைப்பு
சுவாச இருமலுக்கும் சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல்
தொல்லை கொடுக்கும்போதும் இஞ்சி கஷாயம் சாப்பிடலாம்

வல்லாரை
          இது கற்பக மூலிகையாகும். வாய்ப்புண், ஆசனவாய்க் கடுப்பு மற்றும் எரிச்சல் யானைக்கால் மேகப்புண் நெறிகட்டுதல் தொழுநோய் ஆகியவற்றை குணமாக்கும். ஞாபக சக்தியை உயர்த்தும்

அகத்தி கீரை
         சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ளது. தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும்.

துத்திகீரை
          இது மூலத்தை குணமாக்கும். துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் சிறுநீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.

ரோஜா

          இது துவபர்ப்பு சுவையுடையது. இது உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் தரும். அஜீரணம் வயிற்று வலி ஆகியவற்றை குணப்படுத்தும்

No comments: